Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடற்படை வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை

டிசம்பர் 30, 2019 06:11

புதுடெல்லி: இந்திய கடற்படை வீரர்கள் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட வணிக தளங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

கடற்படை தளங்கள் மற்றும் போர்க்கப்பல்களில் இருக்கும்போது ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தவும் தடை விதித்து கடற்படை உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைத்தளம் வாயிலாக எதிரிநாட்டு உளவு அமைப்புகளுக்கு, முக்கிய தகவல்களை கசியவிட்டதாக கடற்படையைச் சேர்ந்த 7 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். எனவே, கடற்படையின் தகவல்கள் திருட்டு போக வாய்ப்பு உள்ளதால், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்